உள்ளூர் செய்திகள்
ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உருவபடத்துக்கு மாநில தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்திய

ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் உருவ படத்துக்கு மலரஞ்சலி

Published On 2022-05-16 10:15 IST   |   Update On 2022-05-16 10:15:00 IST
முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஐ.என்.டி.யூ.சி தலைவர் ரவிச்சந்திரன் உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் மறைந்த டாக்டர் ரவிச்–சந்திரன் முதலாம் ஆண்டு நினைவு தினம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி.  தலைமை அலுவலகத்தில் நடந்தது.

புதுவை ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ஜி.ஆர்.பாலாஜி  தலைமையில், ரவிச்சந்திரன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதன் பிறகு அங்கிருந்த நிர்வாகிகள் மாநில தலைவர் பாலாஜி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு காந்தி வீதி, செண்பகா ஓட்டல் அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்–பட்டிருந்த ரவிச்சந்திரன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து புதுவை மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார். புதுவை நகரப்பகுதி, உழவர்கரை நகராட்சி, மூலகுளம் சந்திப்பில், அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள வள்ளலார் மடம் ஆகிய இடங்களில் தலைவர் ரவிச்சந்திரன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் அபிஷேகம்,சேது செல்வம். சி.ஐ.டி.யூ. முருகன், சீனிவாசன். விடுதலை சிறுத்தை முன்னணி செந்தில், முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், குமரன், ராஜாராமன், மலர்மன்னன், குணா என்ற ராமலிங்கம், ஸ்ரீகாந்த், சரவணன் மற்றும் மாநில ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

காரைக்காலில் ஐ.என்.டி.யூ.சி.  பொதுச்செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் ரவிச் சந்திரன் உருவப் படத்திற்கு மலர் அஞ்சலியும , அன்னை தெரசா முதியோர் காப்பகத்தில் மதிய உணவும் வழங்கப்பட்டது.

Similar News