உள்ளூர் செய்திகள்
எம்.ஐ.டி. கல்லூரி சென்னை விர்ச்சுசா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காட்சி.

எம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-05-15 14:40 IST   |   Update On 2022-05-15 14:40:00 IST
விர்ச்சுசா நிறுவனத்துடன்எ ம்.ஐ.டி. கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி) சென்னையை சேர்ந்த விர்ச்சுசா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார்,துறை பேராசிரியர்கள் ஆகியோர்முன்னிலையில் எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் விர்ச்சுசா நிறுவனத்தின் துணை தலைவர் நாராய-ணன் சுந்தரேசன், கீர்த்தி வாசன், மனித வள மேலாளர்கள் கீதாஞ்சலி, மீனாட்சி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Similar News