உள்ளூர் செய்திகள்
ேகாப்புபடம்

உடுமலை அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா வருகிற 16-ந்தேதி நடக்கிறது

Published On 2022-05-15 11:53 IST   |   Update On 2022-05-15 11:53:00 IST
கல்லூரி முதல்வர் சோ.கி. கல்யாணி தலைமை வகிக்கிறார்.
உடுமலை:

உடுமலை அரசு கலைக்கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வருகிற 16-ந்தேதி காலை 11 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. கல்லூரி முதல்வர் சோ.கி. கல்யாணி தலைமை வகிக்கிறார். கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உலகி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி துறை உதவி பேராசிரியர் வள்ளி முருகன் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News