உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே இந்திராநகரில் ஆஞ்சநேயர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

Published On 2022-05-15 06:16 GMT   |   Update On 2022-05-15 06:16 GMT
சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள இந்திராநகர் ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் லட்சுமி நரசிம்ம பகவானின் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் லட்சுமி நரசிம்மருக்கு பால்,தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிசேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.


Tags:    

Similar News