உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது

அரசு பள்ளி மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம்

Published On 2022-05-14 17:01 IST   |   Update On 2022-05-14 17:01:00 IST
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில் வடமலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்வி ரிவாக்கப்பணி நடந்தது.

“108 ஆம்புலன்ஸ் செயல்முறை விளக்கம்” என்ற தலைப்பில்தி ருத்தங்கல் அரசு மருத்துவ மனையின் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ அலுவலர் ராஜசேகர், பைலட் குமார ராஜா  ஆகியோர் பங்கேற்றனர். ரரஜசேகர் பேசுகையில், மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு குறித்த பிரச்சினைகளுக்கு 108 ஆம்புலன்சை அழைக்கலாம். உயர்ரக வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் விருதுநகரில் உள்ளது என்று கூறிய அவர், அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கினார். 

குமார ராஜா பேசுகையில், விபத்துகள் மூலம் ஒவ்வொரு வகையான பாதிப்புகளை அடைந்தவர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும்? என்பதையும்,எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? என்பதையும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் செயல்முறை விளக்கம் அளித்தார். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். வடமலாபுரம்அ ரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செங்கமலநாச்சியார்ந ன்றி கூறினார்.

இந்தநிகழ்வில் 66 கல்லூரி மாணவர்களும், 80 பள்ளி மாணவர்களும், 6 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல், கணினிப் பயன்பாட்டியல் துறை  உதவிப்பேராசிரியர்கள் கார்த்தீஸ் பாண்டியன், மனோஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News