உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மோப்பநாய் சோதனை
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மோப்பநாய் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர்.
குடியாத்தம் :
வேலூர் மாவட்டம் மோப்ப நாய் பிரிவினர் மோப்பநாய் அக்னியுடன் கெங்கையம்மன் கோவிலில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் மோப்பநாய் கொண்டு கோவிலின் வளாகத்தில் உள்ள பகுதிகளில் சோதனை செய்தனர்.
தொடர்ந்து காவல் துறையினரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல்டிடெக்டர் கருவி மூலம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தபோது கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.