உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்த காட்சி.

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-05-14 10:30 GMT   |   Update On 2022-05-14 10:30 GMT
திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை : 

திருவண்ணாமலை அருகே தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் பெருமணம் கிராமத்தில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. 

இதையட்டி கடந்த 12-ந்தேதி காலை விநாயகர் அனுக்ஞை ஸ்ரீகணபதி ஹோமம் ஸ்ரீநவக்கிரக ஹோமம் ஸ்ரீமகலட்சுமிஹோமம் வாஸ்து ஹோமம் பிரவேச பலி மிருத்ஸல் கரணம், அங்குரார்ப்பணம், ஆகியவை நடந்தது. மாலை 2ம் கால யாகசாலை பூஜை சஹஸ்ரநாம அர்ச்சனை வேதபாராயணம் மற்றும் தீபாராதனை வானவேடிக்கைகள் ஆகியவை நடந்தது.

மறுநாள் காலை கோபூஜை பிரம்மகத்தி மூன்றாம்கால யாகசாலை அம்மன் கோபுரத்திற்கு மகாகும்பாபிஷேகம் தேவாங்கு குல மக்கள் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் டி.மூர்த்தி தலைமையில் வெகுவிமரிசையாக நடந்தது.
அதனை தொடர்ந்து குளக்கரையில் அம்மனுக்கு அபிஷேகம் காப்பு கட்டுதல் சக்தி, பண்டாரி, வீரபத்திரசுவாமி, கத்திவிளையாட்டு மற்றும் அழகுசேனைகளுடன் கோவிலுக்கு அழைத்து வருதல் ஜோதிதீபம் ஸ்தாபித்தல் மாவு இடித்தல் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கத்திநிறுத்துதல் ஆகியவை நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கிராம தேவாங்கு குல மக்கள் அமைப்பை சேர்ந்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி ஊர் பிரமுகர் சுந்தரம் மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னின்று நடத்தினர்.
Tags:    

Similar News