உள்ளூர் செய்திகள்
கடலோர காவல் படை ரோந்து பணி

மத்திய அரசு எச்சரிக்கை எதிரொலி- கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர காவல் படை ரோந்து பணி

Published On 2022-05-13 10:29 GMT   |   Update On 2022-05-13 10:29 GMT
தற்போது மீன்பிடி தடைகாலம் உள்ளதாலும், கடலில் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர்:

இலங்கை முழுவதும் வன்முறைக்களமாக காட்சி அளித்து வரும் நிலையில் தேச விரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக காவல் துறை, பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இலங்கையில் இருந்து தப்பிய கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப் பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடலோர காவல்துறை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் கடலோர காவல்படை போலீசார் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி எல்லை பகுதி மரக்காணம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் தீவிரமாக படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது மீன்பிடி தடைகாலம் உள்ளதாலும், கடலில் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் சந்தேகப்படும்படியான படகுகளில் நபர்கள் யாரேனும் கடல் வழியாக வருகை தந்தால் கடலோர மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடலோர காவல் படையினர் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் படங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News