உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-05-13 14:11 IST   |   Update On 2022-05-13 14:11:00 IST
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 60). இவர் இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அலுவலகம் முன்பு திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டோல்கேட் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணிடம் ரூ.60 லட்சம் பணம் மற்றும் 80 பவுன் நகை கொடுத்தேன். அதனை வாங்கிக் கொண்டு அவர் தர மறுக்கிறார்.

இதுபற்றி போலீசில் புகார் அளித்தால் பணம்-நகை கொடுத்ததற்கு சாட்சி உள்ளதா என கேட்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.

எனவே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய வந்தேன் என்றார்.

இதனையடுத்து ராஜேந்திரசிங்கை சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News