உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 86 லட்சம் வசூல்

Published On 2022-05-12 10:57 GMT   |   Update On 2022-05-12 10:57 GMT
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.86 லட்சத்து 34 ஆயிரத்து 427 ரொக்கமும், 474 கிராம் தங்க நகைகளும், 2328 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேல்மலையனூர்:

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவர்.

இதை ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் (பொறுப்பு) ஜோதிலட்சுமி, கள்ளக்குறிச்சி சிவலிங்கம், விழுப்புரம் துணை ஆணையர் சிவாகரன், அறங்காவலர் குழுத் தலைவர் வடிவேல் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில் ரூ.86 லட்சத்து 34 ஆயிரத்து 427 ரொக்கமும், 474 கிராம் தங்க நகைகளும், 2328 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது செயல்அலுவலர் அருள், அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளகள் அன்பழகன், சங்கரி, பாலமுருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News