உள்ளூர் செய்திகள்
கைது

காவலாளியை தாக்கிய 4 பேர் கைது

Published On 2022-05-12 10:55 GMT   |   Update On 2022-05-12 10:55 GMT
காவலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை

மதுரை விளாச்சேரி, ஆதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 59). இவர் விளாச்சேரி கண்மாயில் காவலாளியாக உள்ளார். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்மாயில் இருந்த பரிசலை எடுத்துக்கொண்டு கண்மாய்க்குள் சென்று திரும்பி வந்தது. 

இதனை ராதாகிருஷ்ணன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேர் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக திருநகர் போலீசில் புகார் கொடுத்தார். 

இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து காவலாளியை தாக்கிய முனியாண்டிபுரம் பிரசாத் கண்ணன் (25), மொட்டமலை, கலைஞர் நகர் மீனாட்சிசுந்தரம் (26), குமார் (27), மணிவண்ணன் (27)  ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

இது தவிர தப்பி ஓடிய விளாச்சேரி செட்டியார் தெரு சேதுபிரசாத் (27), ஷாஜகான் (25) ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News