உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கீழ்பென்னாத்தூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-11 14:33 IST   |   Update On 2022-05-11 14:33:00 IST
கீழ்பென்னாத்தூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. 

வட்டார தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். துணை தகலவர்கள் பால் தங்கம், பாபு, மரியசூசை, துணைசெயலாளர்கள் நடராஜன், குமார், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வட்டார செயலாளர் அய்யாசாமி அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை கல்வி மாவட்ட செயலாளர் பா. கரீம் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தின் விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், குலசேகரன், கலைவாணி ஆர்ப்பாட்டம் செய்தனர், வட்டார பொருளாளர் ஜானகி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கற்பகம் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News