உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியை கோட்டப்பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்த எடுத்த காட்சி

திருவண்ணாமலை, போளூர் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Published On 2022-05-11 14:31 IST   |   Update On 2022-05-11 14:31:00 IST
திருவண்ணாமலை, போளூர் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
திருவண்ணாமலை:

சாலை விரிவாக்கம், வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த கணக்கெடுப்பு பணியின் மூலம் எந்தெந்த சாலையில் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என்று வாகனங்களில் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதன் அடிப்படையாக கொண்டு சாலை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை கோட்டத்திலும் இப்பணி தொடங்கியது. 

திருவண்ணாமலை கோட்டத்தில் 44 இடங்களில் இப்பணி நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் நடைபெற்ற பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதேபோல் இப்பணியை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் கலைமணி, தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இப்பணியானது தொடர்ந்து நேற்று முதல் 7 நாட்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் உட்கோட்டம் போக்குவரத்து செரிவு (வாகனங்கள்) வருடாந்திர கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.

போளூரில் 4 இடங்களில் நடைபெற்ற கணக்கு எடுக்கும் பணிகளை போளூர் உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் வெங்கடேசன் மற்றும் உதவியாளர் வேலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News