உள்ளூர் செய்திகள்
கத்தியால் குத்திய கணவனை வெட்டிக் கொன்ற மனைவி- மது போதையால் சீரழிந்தது குடும்பம்
வேலூரில் மதுகுடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவனை மனைவியே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 60). லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்றுவிட்டார். மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் குமரவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு பொழுதை கழித்தார். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் அவர் கோமதியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று இரவு குமரவேல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் கணவன் மனைவி சண்டை முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குமரவேல் கத்தியை எடுத்து கோமதியை வெட்டினார். அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் தப்பி ஓடிய கோமதி கத்தியை பிடுங்கி கணவன் என்று பாராமல் குமரவேலை எதிர்த்து வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வெட்டுக்காயத்தில் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரவேல் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்தார். கோமதி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். மதுப்பழக்கத்தால் குமரவேல் தகராறில் ஈடுபட்டதால் அவர்களது குடும்பத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 60). லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்றுவிட்டார். மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் குமரவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு பொழுதை கழித்தார். தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் அவர் கோமதியிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று இரவு குமரவேல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் கணவன் மனைவி சண்டை முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குமரவேல் கத்தியை எடுத்து கோமதியை வெட்டினார். அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் தப்பி ஓடிய கோமதி கத்தியை பிடுங்கி கணவன் என்று பாராமல் குமரவேலை எதிர்த்து வெட்டி சாய்த்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வெட்டுக்காயத்தில் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரவேல் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்தார். கோமதி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். மதுப்பழக்கத்தால் குமரவேல் தகராறில் ஈடுபட்டதால் அவர்களது குடும்பத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.