உள்ளூர் செய்திகள்
தடங்கம் பகுதியில் வாகனம் மோதியதில் வாலிபரின் கால் முறிவு
தடங்கம் பகுதியில் வாகனம் மோதியதில் வாலிபரின் கால் முறிவு ஏற்பட்டது.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமி பேட்டையை சேர்ந்தவர் மாது. இவரது மகன் பாலாஜி (வயது25). இவர் நேற்று இரவு அதியமான்கோட்டை அருகேயுள்ள தடங்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பாலாஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் முறிந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து கால் முறிவு ஏற்பட்ட பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.