உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் மணிகண்டன் (வயது 25). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் செங்குணம் பாலம்பாடி அருகே வயலில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.