உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி அருகே கார் மோதி வாலிபர் பலி - பிறந்தநாளில் பலியான சோகம்

Published On 2022-05-09 16:07 IST   |   Update On 2022-05-09 16:07:00 IST
அவினாசி மங்கலம் ரோட்டில் ஒரு வளைவில் சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அவினாசி:

அவினாசியை அடுத்துள்ள தேவராயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்( வயது 28). இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவினாசி மங்கலம் ரோட்டில் ஒரு வளைவில் சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News