உள்ளூர் செய்திகள்
மாயம்

மாணவி மாயம்

Published On 2022-05-08 10:40 GMT   |   Update On 2022-05-08 10:40 GMT
ஸ்ரீவில்லிபுத்ததூர் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த மாணவி மாயமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோ விலில் தனியாருக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் உள்ளே கலைக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, என்ஜினீ யரிங் கல்லூரி என பல கல்லூரிகள்   இயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் இருந்தும்  வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாண விகள் இங்கு தங்கி படித்து வருகின்றனர்.    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சுப்புராஜ்.  இவரது மகள் கலசலிங்கம் கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர்  அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று சுப்புராஜ் போலீசில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பல்கலை கழகத்தில் படிக்கும் சில மாணவிகள்  காணாமல் போய் விடுவதாகவும், சில நேரங்களில் ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கிருஷ்ணன்கோவில் போலீசில் பெற்றோர்கள் இதற்கு முன்பு புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News