உள்ளூர் செய்திகள்
வேலூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்த காட்சி.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4965 இடங்களில் தடுப்பூசி முகாம்

Published On 2022-05-08 08:33 GMT   |   Update On 2022-05-08 08:33 GMT
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4965 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் இன்று 1965 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. வேலூர் உழவர் சந்தையில் சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுவரை வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 101 சதவீதமாகும், 2-வது தவணை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.இதில் மீதும் 11 சதவீதம் மட்டுமே இன்னும் செலுத்த உள்ளது. இது தவிர பூஸ்டர் தடுப்பூசி 65 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூரில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இது தவிர அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 1,500 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 29வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி மற்றும் 55 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 830 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 93 ஆயிரத்து 920 தடுப்பூசிகளும் இருப்பு உள்ளது. 

உடல் ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தினர். இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி சேர்த்துக் கொள்ளுமாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பித்து மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags:    

Similar News