உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

Published On 2022-05-08 13:48 IST   |   Update On 2022-05-08 13:48:00 IST
திருவண்ணாமலை அருகே மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக கலசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். 

இவர் வட்டிக்கு பணம் கடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒருவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு சென்று உடனடியாக கடன் தொகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. 

அந்த சமயத்தில் அவர் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பவன் குமார், மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் ஜெய்சங்கரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

Similar News