உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் சிரசு திருவிழாவின்போது கவுண்டன்ய ஆற்றில் கடை அமைப்பது கோர்ட்டு அவமதிப்பு செயல் வேலூர் கலெக்டர் எச்சரிக்கை
குடியாத்தம் சிரசு திருவிழாவின்போது கவுண்டன்ய ஆற்றில் கடை அமைப்பது கோர்ட்டு அவமதிப்பு செயல் என வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியாத்தம்,
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து நெரிசல்
அப்போது அவர் கூறியதாவது-
தேர்வு நடைபெறும் பள்ளிகளை ஆய்வு செய்த போது மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு எழுதுகின்றனர் பரதராமி-குடியாத்தம் இடையே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடியாத்தம் வழியாக வெளிம ாநிலங்களிலிருந்து அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மரக்கட்டைகளை சாலையில் போக்குவரத்து இடையூறாக போட்டுள்ளனர் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதை அப்புறப்படுத்த மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோர்ட்டு அவமதிப்பு
கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் கடைகள் போடுவதற்கு தடைவிதிக ்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றியபின் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கோர்ட்டு உத்தரவு இருப்பதால் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றுப்பகுதியில் கடைகளை அமைக்க கூடாது. அப்படி கடைகளை அமைத்தால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகும்.
கெங்கையம்மன் திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
பயிர் இழப்பீடு
கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்தது இதனால் பல பகுதிகளில் வாழை, நெல், மாஉள்ளிட்ட விவசாய பயிர்கள் பெருத்த சேதம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
இது குறித்து ஓரிரு நாளில் ஆய்வு அறிக்கை வந்தபின் உரியவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வளத்தூர் பள்ளியில் தேர்ச்சி பெற்றும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பத்தாம் வகுப்பு படித்த மாணவன் சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க எடுப்பார்கள் என தெரிவித்தார்.