உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 7 குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-05-04 15:34 IST   |   Update On 2022-05-04 15:34:00 IST
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:

ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 3 பெண்கள் உட்பட 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி ஒருவரை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்ற வழக்கில் 12 பேரை போலீசாரால் கைது செய்தனர்.  

இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக குற்றம்  சாட்டப்பட்ட குற்றவாளிகளான சாந்தா, சந்திரா, இந்திரா, பிரேம், வெற்றி கண்ணன், தெய்வீகன், மனோஜ், குமார் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.  

அதன்பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இவ்வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு இதுவரை 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News