உள்ளூர் செய்திகள்
மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

போளூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்

Published On 2022-05-04 09:49 GMT   |   Update On 2022-05-04 09:49 GMT
போளூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வேலூர்- சித்தூர் சாலையில் போளூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

போளூர் சுற்றுவட்டார கிராமங்களில் அனைத்து விவசாயிகளும் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தான் அறுவடை செய்த நெல்லை கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் நெல்லை பல நாள் காத்திருந்து விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் இன்று காலை சுமார் 6 மணி அளவில் விவசாயிகள் கொண்டு வந்த நிலை சரியாக எடை போடாமல் இடையில் முறைகேடு செய்வதும் உள்ளூர் விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளை அழைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதிகாரிகளுடன் எவ்வளவும் விவசாயிகள் முறையிட்டும் கண்டுகொள்ளாததால் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போளூர் விவசாய சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சித்தூர் டு வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சுமார் 8 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அரை மணி நேரம் நீடித்த இந்த சாலைமறியலில் போளூர் காவல்துறையினருக்கு தகவல் அறிந்து உடனே விரைந்து வந்து விவசாயிகளிடம் அதிகாரியிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் மறியலை கைவிடுங்கள் என்று கூறினர்.

ஆனால் விவசாயிகள் மறியலை கைவிடுவதாக இல்லை உடனே காவல்துறையினர் போளூர் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம் சங்கர் போன்றவர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சூப்பிரண்டு தாமோதரன் இடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என்று உறுதி கூறினர்.

 பிறகு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News