உள்ளூர் செய்திகள்
குடிபோதையில், தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த தொழிலாளி பலி
சேலம் வீராணம் அருகே குடிபோதையில், தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவருக்கு கலைச்செல்வி (45) என்ற மனைவி உள்ளார்.
முருகேசன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30 ந் தேதி சேலம் பள்ளப்பட்டி பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த முருகேசன், தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த முருகேசனை அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.