உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மளிகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-05-03 17:29 IST   |   Update On 2022-05-03 17:29:00 IST
ஆரணி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரம் பொருட்கள் திருடி சென்றனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் கடலூர் சித்தூர் சிசி சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றார்.

மேலும் வழக்கம் போல் நேற்று இரவு வேலை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். மீண்டும் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ. 25 ஆயிரம், மளிகை பொருட்கள் திருடு போனது தெரிய வந்தன.

சம்பவம் குறித்து மளிகை கடை உரிமையாளர் மணி கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News