உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அமரர் ஊர்தி ஓட்டுநர் தற்கொலை

Published On 2022-05-03 15:16 IST   |   Update On 2022-05-03 15:16:00 IST
வீடியோ காலில் மனைவியிடம் தகவல் கூறிவிட்டு அமரர் ஊர்தி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் மனைவி யிடம் வீடிேயா காலில் தகவல் கூறிவிட்டு அமரர் ஊர்த்தி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அசோக் பிரபு (வயது 43) இவர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநராக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி.

இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு கணவரு டன் கோபித்துக் கொண்டு காளீஸ்வரி கோவைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் பெரம்ப லூரில் உள்ள நண்பரின் அறையில் தங்கியிருந்த அசோக் பிரபு சம்பவத்தன்று  இரவு செல்போனில் இருந்து வீடியோ காலில் தனது மனைவியை அழைத்து நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளர். இதனால் அதிர்ச்சியடைந்த காளீ ஸ்வரி இதுகுறித்து அசோக்பி ரபுவின் நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அசோக் பிரபு தூக்கிட்ட நிலையில் சடல மாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

Similar News