உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் குமரவேல் (வயது45). விவசாயியான இவர், சாத்தமங்கலம் கோத்தாரி சக்கரை ஆலை அருகே 8 ஏக்கர் குத்தகை நிலத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இருந்து வெளியே வரும் கழிவுகளால் பருத்தி பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மார்ச் 25 -ந் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், தொடர்ந்து வேளாண் இணை அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தார்.
ஆயினும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்து குமரவேல், நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், குமரவேல் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை மீட்டு அரியலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குமரவேல் மனைவி கண்ணகி கலெக்டரிடம் மனு அளித்தார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள சாத்தமங்கலம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் குமரவேல் (வயது45). விவசாயியான இவர், சாத்தமங்கலம் கோத்தாரி சக்கரை ஆலை அருகே 8 ஏக்கர் குத்தகை நிலத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில், சர்க்கரை ஆலையில் இருந்து வெளியே வரும் கழிவுகளால் பருத்தி பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மார்ச் 25 -ந் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், தொடர்ந்து வேளாண் இணை அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தார்.
ஆயினும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்து குமரவேல், நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், குமரவேல் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை மீட்டு அரியலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குமரவேல் மனைவி கண்ணகி கலெக்டரிடம் மனு அளித்தார்.