உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்

Published On 2022-05-03 09:22 GMT   |   Update On 2022-05-03 09:22 GMT
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:

மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி அருகே உள்ள சித்தோடு கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி கிரு ஷ்ணவேணி (30). இவர் கங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

  சம்பவத்தன்று மாலை இவர் வேலை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நசியனூர் வாரச்சந்தைக்கு சென்றார்.

அப்போது இவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்ெமட் அணிந்து கொண்டு 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 3 அரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

இது குறித்து அவர் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளை ஆய்வுசெய்துமர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News