உள்ளூர் செய்திகள்
ஓவிய போட்டி நடை பெற்ற போது எடுத்த படம்.

பெரம்பலூரில் உலக ஓவிய தின போட்டி

Published On 2022-05-02 15:43 IST   |   Update On 2022-05-02 15:43:00 IST
பெரம்பலூரில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி நடை பெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில்அரசு இசைப்பள்ளியில் திருச்சி கலை பண்பாட்டுமையம், ஜவஹர் சிறுவர் மன்றமும் இணைந்து உலக ஓவிய தினத்தையொட்டி ஓவியப்பயிற்சி முகாம் மற்றும் ஓவிய போட்டியை நடத்தியது.

பயிற்சி முகாமினை திருச்சி மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் சுந்தர் தொடங்கி வைத்து பேசினார். இதில் ஓவிய ஆசிரியர்கள் ஹேமா, சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு ஓவியம் வரைதல் குறித்து பயிற்சி அளித்தனர்.  

பின்னர் ஓவியபோட்டி நடந்தது. இதில் வயது மற்றும் வகுப்பு அடிப்படையில் 5 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. 175  மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.

பின்னர் அனைத்து ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டு அதில் சிறந்த 5 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஓவியங்கள் மாநிலஅளவிலான போட்டியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.

Similar News