உள்ளூர் செய்திகள்
ஓட்டுனர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஓட்டுனர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

Published On 2022-05-02 15:03 IST   |   Update On 2022-05-02 15:03:00 IST
வைத்தீஸ்வரன்கோயிலில் ஓட்டுனர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
சீர்காழி:

சீர்காழி அடுத்த வைத்தீ ஸ்வ ரன்கோயில் பகுதியில் மே தினத்தையொட்டி சேவாதள காங்கிரஸ் மற்றும் தேசபக்தி இயக்கினத்தின் சார்பில் கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க ப்பட்டது. சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால.எழிலரசன் தலைமையில் உழைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் ஓட்டுனர்களை அழைத்து சால்வை அணிவித்து மரக்கன்றுகளை வழங்கினார்.

இதில் சுதந்திர போராட்ட வீரர் ஏ.கே.சொக்கலிங்கம் வாரிசு சொக்க.ஆறுமுகம் மற்றும் தனபால், தாமஸ், ஸ்ரீதர், முருகன் பங்கேற்றனர்.

Similar News