உள்ளூர் செய்திகள்
கூட்டம் நடைபெற்ற காட்சி.

வாராப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2022-05-02 09:08 GMT   |   Update On 2022-05-02 09:08 GMT
வாராப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் மலர்விழி நாகராஜன் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2021 முதல் 2022 வரை ஆண்டுகளின் வரவு செலவு கணக்கு பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதனை பிரதி எடுத்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டு கிராமசபை மூலம் அங்கீகாரம் செய்யப்பட்டது.

இதில் ஒன்றிய அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் எஸ்சி.த்ரா மற்றும்  வார்டு உறுப்பினர்கள் மகாலட்சுமி, ஆறுமுகம், பழனிச்சாமி, பொன்னையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News