உள்ளூர் செய்திகள்
பள்ளிமேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம்

Published On 2022-05-02 13:44 IST   |   Update On 2022-05-02 13:44:00 IST
பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வடக்கு அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு புதிய தலைவராக கலையரசி மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் சாய்லெட்சுமி வரவேற்ப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர் மணிமாலா, ஆசிரியர் பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News