உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியவர் கைது

Published On 2022-05-02 13:41 IST   |   Update On 2022-05-02 13:41:00 IST
வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் லங்குடி அருகே மேலநெம்மகோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). டிரைவர்.

இவரது மனைவி மாரியம்மாள் (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மாரியம்மாள் தனது கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஆசிரமத்தில்  கூறி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்தபோது கணவர் மணிகண்டன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News