உள்ளூர் செய்திகள்
வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மஞ்சேரி குந்தன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி.இவரது மகன் தினகரன் (வயது 21).கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது.
அவரது உறவினர்கள் தினகரனை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தினகரன் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.
தினகரனின் இருதயம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், சிறுநீரகம் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.