உள்ளூர் செய்திகள்
அரசு கலை கல்லூரியில் விளையாட்டு விழா
ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் விளையாட்டு விழா நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுபோட்டி விழா நடைபெற்றது.
முன்னதாக இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் இராசமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்,
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைதலைவர் வெ.கொ.கருணாநிதி, 13-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மீனாட்சி சங்கர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுபோட்டி விழா நடைபெற்றது.
முன்னதாக இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் இராசமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்,
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைதலைவர் வெ.கொ.கருணாநிதி, 13-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மீனாட்சி சங்கர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் நன்றி கூறினார்.