உள்ளூர் செய்திகள்
கடலூர் அரசு பள்ளியில் மோதல்- விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் தலைமையில் பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம், அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே வெள்ளக்கரை வே.காட்டு பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களிடையே கடந்த 29-ந் தேதி முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களிடையே சமரசம் பேசி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களின் ஒருபிரிவை சேர்ந்த பெற்றோர் சிலர் திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் பள்ளி முன்பு பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நேற்று காலை பள்ளி சீருடை அணியாமல் வந்த மாணவர்கள் சிலர் திடீரென பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து பள்ளிக்குள் புகுந்தனர். 10-ம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர். போலீசாரும், ஆசிரியர்களும் சத்தம்கேட்டு அங்கு வந்ததால் அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவர்கள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளக்கரைசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பி ரண்டு சபியுல்லா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடந்த பள்ளி அமைந்துள்ள இடம் திருப்பாதிரிபுலியூர் மற்றும் நடுவீரப்பட்டு ஆகிய 2 போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது.
இதனால் நேற்றைய போராட்டத்தின்போது யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் 2 போலீஸ் நிலைய அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.
தாக்குதல் சம்பவம் குறித்து காயமடைந்த மாணவர் ஒருவர் திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் செய்தார். நேற்று இரவு மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் 14 மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த பள்ளி அருகிலும், வெள்ளக்கரை பகுதியிலும் இரவிலிருந்தே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வெள்ளக்கரை அரசு பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் தலைமையில் பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம், அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதேபோல பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் அறிக்கை பெறப்படும்.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒழுக்கத்தை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் இவ்வாறு மோதல்கள் ஏற்படுவதை தவிர்ப்பது, இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகள், அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் போன்றவைகள் கவுன்சிலிங்கின்போது வலியுறுத்தப்படும்.
இந்த பள்ளி மட்டுமல்லாது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் அருகே வெள்ளக்கரை வே.காட்டு பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களிடையே கடந்த 29-ந் தேதி முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களிடையே சமரசம் பேசி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களின் ஒருபிரிவை சேர்ந்த பெற்றோர் சிலர் திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் பள்ளி முன்பு பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நேற்று காலை பள்ளி சீருடை அணியாமல் வந்த மாணவர்கள் சிலர் திடீரென பள்ளியின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து பள்ளிக்குள் புகுந்தனர். 10-ம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர். போலீசாரும், ஆசிரியர்களும் சத்தம்கேட்டு அங்கு வந்ததால் அவர்கள் தப்பி ஓடினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவர்கள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளக்கரைசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பி ரண்டு சபியுல்லா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடந்த பள்ளி அமைந்துள்ள இடம் திருப்பாதிரிபுலியூர் மற்றும் நடுவீரப்பட்டு ஆகிய 2 போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது.
இதனால் நேற்றைய போராட்டத்தின்போது யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் 2 போலீஸ் நிலைய அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பின்னர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.
தாக்குதல் சம்பவம் குறித்து காயமடைந்த மாணவர் ஒருவர் திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் செய்தார். நேற்று இரவு மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்களும் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் 14 மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த பள்ளி அருகிலும், வெள்ளக்கரை பகுதியிலும் இரவிலிருந்தே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
வெள்ளக்கரை அரசு பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி கவுசர் தலைமையில் பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம், அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதேபோல பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் அறிக்கை பெறப்படும்.
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒழுக்கத்தை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் இவ்வாறு மோதல்கள் ஏற்படுவதை தவிர்ப்பது, இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகள், அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் போன்றவைகள் கவுன்சிலிங்கின்போது வலியுறுத்தப்படும்.
இந்த பள்ளி மட்டுமல்லாது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.