உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே ‘ஸ்டவ்’ வெடித்து இளம்பெண் பலி
சங்கரன்கோவில் அருகே ‘ஸ்டவ்’ வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் பலியானார். காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை அடுத்த மருதம்கிணறு கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 37). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கவிதா வழக்கம்போல் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை அவர் பற்றவைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ‘ஸ்டவ்’ வெடித்துள்ளது. இதில் மண்எண்ணெய் வெளியேறி திடீரென தீப்பற்றியது. உடனே கவிதாவின் உடலில் தீப்பற்றி மளமளவென பரவியது.
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறித்துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வராஜ் அவரை காப்பாற்ற முயன்றார். அதில் செல்வராஜூம் படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கவிதா பரிதாபமாக இறந்தார். செல்வராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை அடுத்த மருதம்கிணறு கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 37). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு கவிதா வழக்கம்போல் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை அவர் பற்றவைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ‘ஸ்டவ்’ வெடித்துள்ளது. இதில் மண்எண்ணெய் வெளியேறி திடீரென தீப்பற்றியது. உடனே கவிதாவின் உடலில் தீப்பற்றி மளமளவென பரவியது.
இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறித்துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வராஜ் அவரை காப்பாற்ற முயன்றார். அதில் செல்வராஜூம் படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கவிதா பரிதாபமாக இறந்தார். செல்வராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.