உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

குடிபோதையில் தகராறு : வாலிபர்கள் 3 பேர் கைது

Published On 2022-04-30 15:13 IST   |   Update On 2022-04-30 15:13:00 IST
போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம், 
கோவை  பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ெபரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் நின்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 வாலிபர்கள்     சரவணன் மீது மோதி அங்கிருந்த ரேசு பஸ் மீதும் மோதினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் மற்றும் பஸ் டிரைவர் அந்த காரை நிறுத்தி அந்த வாலிபர்களுக்க அறிவுரை கூறினர்.
ஆனால் அந்த வாலிபர்கள் அவர்களின்  பேச்சை கேட்காமல் சரவணன் மற்றும் பஸ் டிரைவரிடம் வாக்கு வாதத்தில்  ஈடுபட்டனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி சாலையில் தகராறு செய்தனர். 
அப்போது  அந்த  3வாலிபர்களும்கு குடிதோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் சரவணன் ெபரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர்கள் ெபரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சரவணன் (31), ஊட்டியை சேர்ந்த சந்தோஷ் (32) மற்றும்  பரமேஷ் (33) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

Similar News