உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் நாளை சில்லறை மதுபான விற்பனை கடைக்கு விடுமுறை
மே தினத்தை முன்னிட்டு நாளை மே1-ந்தேதி அனைத்து மது பான சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள்,
மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மே தினத்தை முன்னிட்டு
நாளை 1.5.22 (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.