உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்

Published On 2022-04-30 09:32 GMT   |   Update On 2022-04-30 09:32 GMT
வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடக்கிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நாளை 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 10 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என்று அனைத்து வட் டார வளர்ச்சி அலுவ லர்களுக்கும் ‘ கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 முடிய) குறித்து விரிவாக விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற் றம் மற்றும் நிதி செல வின விவரங்கள் குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டம்- 2, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜூவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை இடம் பெற வேண்டும்.

கிராம சபைக்கூட் டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர் கள் பார்வையாளர்க ளாக கலந்து கொள்ள கலெக்டர் மூலம் உத் தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் கிராம சபைக் கூட்டம் நடை பெறு வதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண் டல அலுவலர்கள் நியம னம் செய்தும், வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட 247 கிராம ஊராட்சிகளி லும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News