உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா ஆலோசனைக் கூட்டம்
குடியாத்தத்தில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைெபற்றது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. அதேபோல் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா மே 14-ந் தேதியும், சிரசு ஊர்வலம் மே 15-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து துறை முன்னேற்பாடுகள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்ஜெயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகர்மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், வனத்துறை அலுவலர் மாசிலாமணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்தனா, நீர்வள ஆதார துறை உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார்.
நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும் குடிநீர் வசதி சுகாதார வசதிகளை செய்து தர வேண்டும் தேரோட்டம் மாலை 6 மணிக்குள் நிலையை அடைய வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தேரை பொது ப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே தேரோட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விழா குழுவைச் சேர்ந்த வி.பிச்சாண்டி, ஆடிட்டர் கிருபானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ். சம்பத், திருப்பணிக்குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.அப்போது விழாக்குழுவினர்
இ-டெண்டர் முறை கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்கு மட்டும் கொண்டு வரப் படுவதால் மற்ற கோவில்களுக்கும் இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்பதாக கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்
தொடர்ந்து அதிகாரிகள் திருவிழா பாதுகாப்பு குறித்து செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.