உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் வருகிற 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Published On 2022-04-29 15:05 IST   |   Update On 2022-04-29 15:05:00 IST
வேலூர் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந் தேதி மே தினம் என்பதால், அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடிவைக்க வேண்டும்.

எனவே மேற்படி தினத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.

மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சமமந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் மேற்கொள்ளப்படும்.

அதே போல் அன்றைய தினத்தில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவர் அவர் கூறியுள்ளார்.

Similar News