உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக்கூட்டம்

Published On 2022-04-29 14:03 IST   |   Update On 2022-04-29 14:03:00 IST
நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
                                                           
புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நகர்புறங்க ளில் உள்ள குடிசைவாசிகள் மற்றும் நகர்புற ஏழைகள் வாழ்க்கை நிலைமையை வசதி செய்தல் மற்றும் சாத்தியமான சூழலை உருவாக்குதல், மாநில அளவில் கொள்கை உருவா க்கும் செயல்பாட்டில் ஒருங்கி ணைப்பை மேம்படுத்துதல்,

துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி இணைப்புச் சாலை, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை உருவா க்குதல் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பிற சமூகத்துறைகளுடன் ஒருங்கிணைப்பின் மூலம் நகர்புற ஏழைகள், நகர்புற குடிசை வாசிகளுக்கு நலத்தி ட்டங்கள் சென்றடைதல், நியாயவிலைக்கடை, காவல்நிலையம், நூலகம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உருவாக்குதல், நகர்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற குடியிருப்பு களில் வாழும் மக்களின் பொதுக்கு றைபாடுகளான தெருக்களில் குப்பை தொட்டி அமைத்தல், கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல்,

குடியிருப்புகளில் மகளி ர்சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், இசேவை மையம், ஆவின் நிலையம், செல்போன் டவர்கள் அமைத்தல் போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 புதுக்கோட்டை மாவட்ட நகர்புற வாழ்விடங்கள் மேம்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற ேபாது எடுத்தப்படம்.

Similar News