உள்ளூர் செய்திகள்
வேலூரில் குட்கா கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூரில் குட்கா கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக தொடர்ந்து குட்கா பான் மசாலா போன்றவை கடத்தி வருகின்றனர்.
வேலூர் வடக்கு போலீசார் நடத்திய சோதனையில் குட்கா கடத்தி வந்த கிருஷ்ணகிரி பர்கூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.அதன்படி கலெக்டர் உத்தரவின் பேரில் தீபாராம் குண்டர் சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.