உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-04-28 16:13 IST   |   Update On 2022-04-28 16:13:00 IST
ராணிப்பேட்டையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. 

இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, பட்டபடிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 

இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News