உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் தொழிலாளி சாவு

Published On 2022-04-28 15:36 IST   |   Update On 2022-04-28 15:36:00 IST
வேலை செய்யும் போது கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டையைசேர்ந்த பழனிவேல் மனைவி மாரிக்கண்ணு என்கின்ற ஆனந்தி (வயது 35 ). கட்டிட தொழிலாளியான இவர், சம்பவத்தன்று ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள தனியார் காம்ளக்ஸ் 5வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார்.

 இதனை பார்த்த மற்ற பணியாளர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News