உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-04-28 15:33 IST   |   Update On 2022-04-28 15:33:00 IST
மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

 புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் அருகில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த மேலகரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் (வயது 50), கம்பர் தெருவைசேர்ந்த ராஜேந்திரன் ( 52) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்களை  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News