உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கியில் மாட்டுவண்டி எல்லை பந்தய போட்டி நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் திருக்கோயில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு 82 -ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்லை பந்தையம் நடைபெற்றது.
வைரிவயல் ஸ்ரீ வீரமுனி ஆண்டவருக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும் அதனை யொட்டி அன்று காலை கோவிலில்இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம்.
82 -ம் ஆண்டாக நேற்று நடைபெற்ற மாட்டு வண்டி,குதிரை வண்டி பந்தயத்தில் சென்னை, கோவை,ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறுபகுதி யிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்துகொண்டன.
போட்டியில் பெரிய மாடு, கரிச்சான்மாடு, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டு குதிரை என நான்குபிரிவு களாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 11 ஜோடிகளும்,
கரிச்சான் மாடு பிரிவில் 18 ஜோடிகளும், கரிச்சான்குதிரை பிரிவில் 28 குதிரையும், பூஞ்சிட்டு குதிரையில் 20ம் மொத்தம் 29 மாட்டு வண்டிகளும், 48 குதிரைகளும் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்து கொண்ட மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கை நோக்கி ஒன்றையொன்று முந்தி சீறிப்பாய்ந்தன.
போட்டியில் கலந்துகொண்ட வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமை யாளர்களுக்கு மொத்தம் 5 லட்சம் ரூபாய் ரொக்க ப்பரிசும், சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகையுடன் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
வீரமுனி ஆண்டவர் திருக்கோயில் பந்தய நிகழ்ச்சியினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தையத்தை கண்டு ரசித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் ஸ்ரீ வீரமுனி ஆண்டவர் திருக்கோயில் சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு 82 -ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்லை பந்தையம் நடைபெற்றது.
வைரிவயல் ஸ்ரீ வீரமுனி ஆண்டவருக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும் அதனை யொட்டி அன்று காலை கோவிலில்இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம்.
82 -ம் ஆண்டாக நேற்று நடைபெற்ற மாட்டு வண்டி,குதிரை வண்டி பந்தயத்தில் சென்னை, கோவை,ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறுபகுதி யிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்துகொண்டன.
போட்டியில் பெரிய மாடு, கரிச்சான்மாடு, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டு குதிரை என நான்குபிரிவு களாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 11 ஜோடிகளும்,
கரிச்சான் மாடு பிரிவில் 18 ஜோடிகளும், கரிச்சான்குதிரை பிரிவில் 28 குதிரையும், பூஞ்சிட்டு குதிரையில் 20ம் மொத்தம் 29 மாட்டு வண்டிகளும், 48 குதிரைகளும் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்து கொண்ட மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கை நோக்கி ஒன்றையொன்று முந்தி சீறிப்பாய்ந்தன.
போட்டியில் கலந்துகொண்ட வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமை யாளர்களுக்கு மொத்தம் 5 லட்சம் ரூபாய் ரொக்க ப்பரிசும், சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசுத்தொகையுடன் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
வீரமுனி ஆண்டவர் திருக்கோயில் பந்தய நிகழ்ச்சியினை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று பந்தையத்தை கண்டு ரசித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.