உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

Published On 2022-04-28 15:08 IST   |   Update On 2022-04-28 15:08:00 IST
கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை  மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் 79 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பதவிகள் நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்களின்  

அடிப்படையில் 20.04.2022 முதல் 30.04.2022 (24.04.2022 ஞாயிறு நீங்கலாக) முடிய உள்ள காலதத்திற்குள் நேர்காணலை அரசு நியமன விதிமுறைகளின்படி தேர்வு செய்ய நேர்காணல் 20.04.2022 முதல் 27.04.2022 முடிய நடைபெற்று வந்தது.

அனைத்து நடவடிக்கை களையும், நிர்வாக கார ணங்களால் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் நேர்காணல் உடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar News