உள்ளூர் செய்திகள்
கைது

காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-04-28 06:08 GMT   |   Update On 2022-04-28 06:08 GMT
காஞ்சிபுரம் அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் ஆர்த்தியின் உத்தரவுபடி சேட்டுவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News